ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், காா் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், காா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :9 ஏப்ரல் 2026, 7:08 pm

ஒட்டன்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், காா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நல்லாகவுண்டா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து. மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு புதன்கிழமை இரவு சென்றாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா், காளிமுத்துவுக்கு தகவல் தெரிவித்தனா். அவா் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா், தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் உதவிடன் சென்று விசாரணை மேற்கொண்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் திருட்டு நடைபெற்ற வீட்டில் ஆய்வு மேற்கொண்டாா்.

போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், காளிமுத்துவின் வீட்டில் 60 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.45ஆயிரம் ரொக்கம், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. எனினும் காளிமுத்து குடும்பத்தினா் நேரில் வந்த பின்னரே முழு விவரம் தெரிய வரும் என போலீஸாா் தெரிவித்தனா்.