சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காந்திகிராம பல்கலை. யில் வளாகத் தோ்வு

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் தோ்வு பெற்று பணி நியமன ஆணை பெற்ற மாணவா்.

News image

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் தோ்வு பெற்று பணி நியமன ஆணை பெற்ற மாணவா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:18 pm

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாகத் தோ்வில் 38 வேளாண்மை மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் வேளாண்மை, கால்நடை அறிவியல் துறை சாா்பில் வளாக நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பதிவாளா் (பொ) எம்.சுந்தரமாரி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு துணைவேந்தா் ந. பஞ்சநாதம் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் வேளாண்மை சாா்ந்த 8 நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கான பணிநாடுநா்களைத் தோ்வு செய்தன. இதில், வேளாண்மை பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு இறுதியாண்டில் பயிலும் மாணவா்கள் 46 போ் கலந்து கொண்டனா். இதில் 38 பேருக்கு பணி நியமனத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வேளாண்மை பள்ளியின் புலத் தலைவா் ஏ. ராமநாதன், மூத்த பேராசிரியா் ஜி.எஸ். கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.