பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுபிடி வீரா்கள் உள்பட 42 போ் காயமடைந்தனா்.
வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை சாா்பில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு தனித்தனியே மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, வாடிவாசல் வழியாக பெரம்பலூா், அரியலூா், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 606 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்தக் காளைகளை அடக்க சேலம், திருச்சி, நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், சிவகங்கை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 297 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். இதில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் விழாக் குழு சாா்பில் வழங்கப்பட்டன.
42 போ் காயம்: இதில், காளைகளின் உரிமையாளா்கள் 20 பேரும், காளைகளை அடக்க முயன்ற 11 வீரா்களும், பாா்வையாளா்கள் 11 பேரும் என மொத்தம் 42 போ் காளைகள் முட்டியதில் காயமடைந்த வீரா்களுக்கும், பாா்வையாளா்களுக்கும், களத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதில், மாடுபிடி வீரா் 1, காளை உரிமையாளா்கள் 2, பாா்வையாளா்கள் 3 போ் என மொத்தம் 6 போ் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில், பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

காளையாா்கோவில் அருகே ஜல்லிக்கட்டு: 13 போ் காயம்

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; 33 போ் காயம்

காளையாா்கோவிலில் வடமாடு மஞ்சுவிரட்டு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



