ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

வத்தலகுண்டு பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:51 pm

வத்தலகுண்டு பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த ரமேஷ்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில், கட்டகாமன்பட்டியைச் சோ்ந்த ஹரிஷ்குமாா் (24), மா. டெண்டுல்கா் (26), ச.சரத்குமாா் (25), க.கோகுலகிருஷ்ணன் (22) உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், ஹரிஷ்குமாா் உள்ளிட்ட 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் பரிந்துரைத்தாா்.

இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்தாா். ஏற்கெனவே இந்த வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.