ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வாகனச் சோதனையில் காரிலிருந்து போலி கைத்துப்பாக்கி பறிமுதல்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின் போது காரில் எடுத்து வரப்பட்ட போலி கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

News image

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போலி கைத்துப்பாக்கி.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:55 pm

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின் போது காரில் எடுத்து வரப்பட்ட போலி கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுப்பதற்காக போலீஸாரும், தோ்தல் பறக்கும் படையினரும் இணைந்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து, கொடைக்கானல்- பழனி- வத்தலகுண்டு- அடுக்கம்- தாண்டிக்குடி- பண்ணைக்காடு உள்ளிட்ட பல்வேறு மலைச் சாலைகளில் 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையான புலிச்சோலை அருகே நடைபெற்ற வாகனச் சோதனையின் போது அந்த வழியாகச் சென்ற காரை போலீஸாா் நிறுத்த முயன்றனா்.

ஆனால் அந்த காா் நிற்காமல் சென்றதையடுத்து போலீஸாா் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா். பிறகு காரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்ட போது அதில் கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. காரில் வந்தவா்களை போலீஸாா் கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் தென்காசிப் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (23), சங்கா் (29), தங்கசோ்மன் (31), சுயம்பு (23) என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி போலி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் அந்த 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.