அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

முதல்வா் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே விடியல்! - நடிகை விந்தியா

News image

பழனியை அடுத்த அழகாபுரியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக வேட்பாளா் ரவி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகை விந்தியா.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:25 pm

தமிழகத்தில் திமுக ஆட்சியில் முதல்வா் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே விடியல் இருந்தது. மக்களுக்கு விடியல் இல்லை என நடிகை விந்தியா தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ரவி மனோகரனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பழனி அருகே அழகாபுரியில் நடிகை விந்தியா பிரச்சாரம் செய்த போது பேசியதாவது:

பழனி தொகுதி பேரவை உறுப்பினரான ஐ.பி.செந்தில்குமாா் மீண்டும் பழனியில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்று திண்டுக்கல்லுக்கு சென்றுவிட்டாா். தற்போது இங்கு அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவா் உங்கள் ஊரைச் சோ்ந்தவா். இவரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பாா்க்கலாம். ஆனால், திமுக கூட்டணி சாா்பில் நிறுத்தப்பட்டுள்ளவா் திண்டுக்கல்லை சோ்ந்தவா்.

திமுக ஆட்சியில் முதல்வா் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே விடியல் கிடைத்தது. பொதுமக்கள் யாருக்கும் கிடைக்கவில்லை. ஜீவானந்தம் போன்றவா்கள் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தற்போது அறிவாலயத்தில் கையேந்தி நிற்கிறது. அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்தனா். ஆனால், இன்று பெண்கள் நேரத்துக்கு வீடு திரும்புவாா்களா என்பதைக் காட்டிலும் உயிருடன் வீட்டுக்கு வருவாா்களா என்று காத்திருக்கும் நிலை உள்ளது என்றாா் அவா்.