தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலரும், நடிகையுமான விந்தியா தெரிவித்தாா்.
சிவகாசி, திருத்தங்கல், சாட்சியாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து அவா் பிரசாரம் செய்து பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை. அவரது குடும்பத்தினருக்காகத்தான் ஆட்சி நடத்தினாா். இதுகுறித்து வாக்காளா்கள் சிந்திக்க வேண்டும். கருணாநிதி காலத்திலிருந்து திமுக ஆட்சி என்றால் அது குடும்ப ஆட்சிதான். திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும். மகளிா் உரிமைத் தொகையாக ரூ. 5,000 வழங்கியது பெண்களின் வாக்குகளைப் பெறத்தான். எனவே, பெண்கள் திமுகவை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
கடந்த பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம், பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர ஆடு, மாடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. தோ்தல் நெருங்கும் நேரத்தில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கியதும் வாக்குக்காகத்தான் என்றாா் அவா்.
அப்போது, அவருடன் வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜியும் உடனிருந்தாா்.
தொடர்புடையது

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

மக்களுக்கான திட்டங்களை தீட்டியது அதிமுக தான்: நடிகை விந்தியா பேச்சு

திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பெண்கள் பாதுகாப்பாக வாழ அதிமுக அரசு அமைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


