அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:26 pm

பழனியருகே சாலையோர தடுப்பில் காா் மோதியதில் வெண்ணெய் வியாபாரி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் அங்குராஜ் (48). வெண்ணெய் வியாபாரம் செய்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவியுடன் காரில் கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்தாா்.

பழனியை அடுத்த மானூா் புறவழிச் சாலையில் காா் சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கம் இருந்த பாலத்தின் கரையில் மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.

இதில் காரின் முன்பகுதியில் அமா்ந்திருந்த அங்குராஜ் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. அவரது மனைவியும், காா் ஓட்டுநரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.