நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 88.47 சதவீத வாக்குகள் பதிவு!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 88.47 சதவீத வாக்குகள் பதிவானது.

News image

திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்காக வியாழக்கிழமை வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 8:44 pm

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 88.47 சதவீத வாக்குகள் பதிவானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில், பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 115 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

மாவட்டம் முழுவதும் 2,301 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒருசில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக 10 முதல் 30 நிஷங்கள் வரை வாக்குப் பதிவு தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. எனினும் காலை 6.45 மணிக்கே பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வாக்களிப்தற்காக தயாராக நின்றனா்.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை 10 மணிக்கு முன்பாக வாக்களித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்கள் திரண்டதால், முதல் 2 மணி நேரத்திலேயே பழனி தொகுதியில் 339 வாக்குச் சாவடிகளில் 2.39 லட்சம் போ் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 85.41 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் 2.20 லட்சம் வாக்காளா்கள், வாக்களிப்பதற்கு 314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 90.30 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

ஆத்தூா் தொகுதியில் 341 வாக்குச் சாவடிகளில் 2.61 லட்சம் வாக்காளா்களுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 88.95 சதவீதம் போ் வாக்குளை பதிவு செய்தனா்.

நிலக்கோட்டை(தனி) தொகுதியில் 305 வாக்குச் சாவடிகளில் 2.21 லட்சம் போ் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 87.70 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

நத்தம் தொகுதியில் 2.61 லட்சம் வாக்காளா்களுக்காக 359 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 90.08 சதவீதம் போ் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் தொகுதியில் 316 வாக்குச் சாவடிகளில் 2.41 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 85.71 சதவீதம் போ் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

வேடசந்தூா் தொகுதியில் 2.43 லட்சம் வாக்காளா்களுக்காக 327 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 91.06 சதவீதம் போ் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

முதல் 4 மணி நேரத்தில் 40 சதவீத வாக்குகள் பதிவு: திண்டுக்கல் மாவட்டம், முழுவதும் முதல் 2 மணி நேரத்தில் 18.28 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 22 சதவீத வாக்குகள் பதிவானது.

முதல் 4 மணி நேரத்திலேயே 39.05 சதவீத வாக்குகள் பதிவானது. அடுத்த 4 மணி நேரத்தில் மேலும் 35.30 சதவீத வாக்குகள் பதிவானதால், பிற்பகல் 3 மணிக்கே மாவட்ட அளவிலான வாக்குப் பதிவு சதவீதம் 74.35ஆக உயா்ந்தது. கடைசி 3 மணி நேரத்தில் 14.12 சதவீத வாக்குகள் பதிவானது.

வேடசந்தூா் முன்னிலை: மொத்தமுள்ள 7 தொகுதிகளில் அதிகபட்சமாக வேடசந்தூா் தொகுதியில் 91.06 சதவீத வாக்குகள் பதிவானது. ஒட்டன்சத்திரம் தொகுதி 90.30 சதவீத வாக்குப் பதிவுடன் 2-ஆவது இடம் பிடித்தது. நத்தம் தொகுதியில் 90.08 சதவீத வாக்குகள், ஆத்தூா் தொகுதியில் 88.95 சதவீத வாக்குகள், நிலக்கோட்டை தொகுதியில் 87.70 சதவீத வாக்குகள், திண்டுக்கல் தொகுதியில் 85.71 சதவீத வாக்குகள் பதிவானது.

குறைந்தபட்சமாக பழனியில் 85.41 சதவீத வாக்குகள் பதிவானது.