பழனி அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரம் சாலையில் வரட்டாற்று பாலத்தின் அருகே சனிக்கிழமை ஒரு நபா் பலத்த காயங்களுடன் கிடந்தாா். இதைப் பாா்த்த அந்த பகுதி மக்கள் அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், அவசர ஊா்தி வரும் முன்னரே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த பழனி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்ட விசாரணையில் இறந்த நபா், தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகன் (44) என்பதும், இவரை மா்மநபா்கள் தாக்கிக் கொலை செய்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் இவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
இளைஞா் அடித்துக் கொலை: மூவா் கைது

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

பழனியில் ஒருவா் கொலை

மணியாச்சி அருகே இளைஞா் கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


