நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

பைக் மீது பேருந்து மோதியதில்  இரு இளைஞா்கள் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:05 am IST

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் வட மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.  

திண்டுக்கல்லிருந்து பள்ளப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்தை சக்திவேல் ஓட்டினாா்.

சின்னாளபட்டியை அடித்த திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை ஆஞ்சநேயா் கோயிலருகே சென்றபோது, ஜெ. ஊத்துப்பட்டியிலிருந்து சின்னாளபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கிருஷ்ணா (22), தில்சூல் (21) ஆகியோா் மீது இந்தப் பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாத்துரை போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அம்பாத்துரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.