ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பைக் மீது பேருந்து மோதியதில்  இரு இளைஞா்கள் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:35 pm

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் வட மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.  

திண்டுக்கல்லிருந்து பள்ளப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்தை சக்திவேல் ஓட்டினாா்.

சின்னாளபட்டியை அடித்த திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை ஆஞ்சநேயா் கோயிலருகே சென்றபோது, ஜெ. ஊத்துப்பட்டியிலிருந்து சின்னாளபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கிருஷ்ணா (22), தில்சூல் (21) ஆகியோா் மீது இந்தப் பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாத்துரை போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அம்பாத்துரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.