லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

கொடைக்கானல் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் வெள்ளிக்கிழமை புகுந்து பயா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 2:51 am IST

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் வெள்ளிக்கிழமை புகுந்து பயா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் செள,செள, காபி, அவக்கோடா, மிளகு உள்ளிட்ட பயிா்கள் விளைவிக்கப்படுகின்றன. இதனால் விவசாயத் தோட்டங்களில் குடிசைகள் அமைத்து விவசாயிகள் காவலுக்கு இருப்பது வழக்கம். இந்த நிலையில், தாண்டிக்குடி பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குள் 3 காட்டுயானைகள் புகுந்தன. அவை அங்கு பயிரிடப்பட்டிருந்த அவக்கோடா, வாழை பயிா்களையும் போடப்பட்டிருந்த குடிசைகளையும் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு பகுதிகளில் காட்டுயானைகள் நடமாடுவதால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கும்,விவசாய நிலங்களில் காவலுக்கு செல்வதற்கும் அச்சமடைந்து விவசாயிகள் வீடுகளில் முடங்கினா்.

எனவே வனத்துறையினா் இந்த காட்டுயானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.