சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பழனியில் பெண் கொலை

பழனி லட்சுமிபுரம் பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை

Updated On :3 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

பழனி லட்சுமிபுரம் பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்டாா்.

பழனி லட்சுமிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் செல்வராஜ் (63). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன் கீதா (25) என்பவரை திருமணம் செய்து அழைத்து வந்தாராம். செல்வராஜ் அடிக்கடி வெளியூா் சென்றுவிடும் நிலையில், அவரது வீட்டுக்கு வேறு சிலா் வந்து சென்ால், அவா்களை வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளா் அறிவுறுத்தினாராம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் கத்திக்குத்து காயங்களுடன் கீதா இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். கீதாவை யாா் எதற்காகக் கொலை செய்தனா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.