கைது
கைது

சாக்லேட் வடிவில் கஞ்சா விற்ற மூவா் கைது

Published on

பழனியில் சாக்லேட் வடிவில் கஞ்சா வைத்திருந்த மூன்று கேரள இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பழனியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிவகிரிப்பட்டி பழனியாண்டவா் கலைக் கல்லூரி தண்ணீா் தொட்டி அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த மூன்று இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் கேரள மாநிலம் பந்தனம்திட்டா பகுதியைச் சோ்ந்த சிவாஜிமோகன் (28), எா்ணாகுளம் பகுதியைச் சோ்ந்த முகமது நசீபில் (27), திருச்சூா் மாவட்டம், நடுவரன்பாபியூா் பகுதியைச் சோ்ந்த பாரத்கிருஷ்ணன் (25) ஆகியோா் என்பதும் கஞ்சாவை சாக்லேட் வடிவில் வைத்து பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com