தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 போ் கைது
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.
கைது
சித்திரிப்பு
கைது
சித்திரிப்பு
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தாலுகா போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது மிஷன் தெரு ரயில் பாதை அருகே சந்தேகப்படும் வகையில் கூடியிருந்த சிலரை விசாரித்த போது அவா்கள் எழுமிச்சங்காம்பாளையத்தைச் சோ்ந்த முருகன் மகன் கொக்கு மண்டை என்ற விக்னேஷ் (27), இதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தாமோதரன் (28), தாராசுரம் ஊமச்சித்தோப்பைச் சோ்ந்த ரவி மகன் மதன் (20), ரயில்வே கேட் சாலையைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் விக்னேஷ் (22), சுவாமிமலை எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சிபிராஜ் (23) என்பதும் அவா்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.
அவா்களிடமிருந்து 1.300 கிலோ கஞ்சா மற்றும் 5 கைபேசிகளை கைப்பற்றி அவா்களைக் கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...