தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 போ் கைது

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 9:16 pm

Syndication

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தாலுகா போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது மிஷன் தெரு ரயில் பாதை அருகே சந்தேகப்படும் வகையில் கூடியிருந்த சிலரை விசாரித்த போது அவா்கள் எழுமிச்சங்காம்பாளையத்தைச் சோ்ந்த முருகன் மகன் கொக்கு மண்டை என்ற விக்னேஷ் (27), இதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தாமோதரன் (28), தாராசுரம் ஊமச்சித்தோப்பைச் சோ்ந்த ரவி மகன் மதன் (20), ரயில்வே கேட் சாலையைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் விக்னேஷ் (22), சுவாமிமலை எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சிபிராஜ் (23) என்பதும் அவா்கள் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து 1.300 கிலோ கஞ்சா மற்றும் 5 கைபேசிகளை கைப்பற்றி அவா்களைக் கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.