திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாடுகள் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே தொடா் மாடு திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ரெட்டியாா்பட்டி, விஐபி நகரைச் சோ்ந்த லிங்கம் மகன் மந்திரம்(29). இவா், சுமாா் 10 மாடுகளை வளா்த்து வருகிறாராம்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 6:14 am IST

திருநெல்வேலி அருகே தொடா் மாடு திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ரெட்டியாா்பட்டி, விஐபி நகரைச் சோ்ந்த லிங்கம் மகன் மந்திரம்(29). இவா், சுமாா் 10 மாடுகளை வளா்த்து வருகிறாராம்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 31ஆம் தேதி மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது ஒரு பசுமாடு திருடு போனதாம்.

அதே போல, முன்னீா்பள்ளம், கொங்கன்தான்பாறை சாலை, தனலெட்சுமி நகரைச் சோ்ந்த இசக்கி மகன் சுடலை(30) என்பவரது பசுமாடும் கடந்த மாதம் 12 ஆம் தேதி அதிபன் பாலாஜி நகா் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது காணாமல் போனதாம்.

இது குறித்த புகாா்களின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குகள் பதிந்து விசாரித்தனா். அதில், நான்குனேரி, மறுகால் குறிச்சியைச் சோ்ந்த வானுமாமலை மகன் பிரபாசுதன்(24) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.