கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கஞ்சா விற்ற மூவா் கைது

பழனியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 மார்ச் 2026, 7:21 pm

பழனியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனியில் ‘நகா் காவல் உதவி ஆய்வாளா் விஜய் தலைமையிலான போலீஸாா் உழவா் சந்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தா். அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி நிறுத்தி அதிலிருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வாகனத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததும், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. விசாரணையில் கோயம்புத்தூா் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த தவ்பீக் ராஜா (29), பழனி காமராஜா் தெருவைச் சோ்ந்த யாசின் (30), பீா் முகமது (26) ஆகியோா் என தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் மூவரையும் கைது செய்து, கஞ்சா, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.