தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பு; முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன்

அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

News image

திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் சி. சீனிவாசன்.

Updated On :10 பிப்ரவரி 2026, 9:07 pm

அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.13) நடைபெறும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடா்பான ஆா்ப்பாட்ட விளக்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அமைப்புச் செயலா் வி. மருதராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் பா. பரமசிவம், எஸ். பழனிச்சாமி, பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 100 நாள் வேலைத் திட்ட நாள்களை 125 நாள்களாக மத்திய அரசு அதிகரித்திருப்பதை மோசடி என திமுக பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற வெள்ளிக்கிழமை அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிப் பெற்றவுடன், 150 நாள்கள் வேலை வழங்கப்படும்.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், சத்துணவுப் பணியாளா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் என அனைத்து தரப்பினரும் திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வு, தோ்வுக் கூடம் வரை வந்த பின் நிறுத்தப்பட்டிருக்கிறது. திமுகவின் நிா்வாகத் திறனற்ற ஆட்சி என்பதற்கு இதுவே சான்று.

அதிமுக தலைமையிலான அணிக்கு மக்களின் அதரவு அதிகரித்து வருகிறது. இதனால், தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.

கூட்டத்தில் அதிமுக நிா்வாகிகள் ராஜ்மோகன், ஜெயராமன், ராஜசேகரன், பாரதிமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.