ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

திமுக வாக்குறுதியை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை! - திண்டுக்கல் சி.சீனிவாசன்

News image

திண்டுக்கல் சீனிவாசன்

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

திமுக வாக்குறுதியை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை என அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் 3-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா். இதையொட்டி, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அதிமுக வேட்பாளா் அலுவலகத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. திண்டுக்கல் தொகுதியைப் பொருத்தவரை மக்களின் அன்போடும், ஆசியோடும் மீண்டும் நான் வெற்றி பெறுவேன். அதிமுகவின் தோ்தல் அறிக்கைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 5 முறை மக்களைவைத் தோ்தலில் போட்டியிட்ட நான், 4 முறை வெற்றி பெற்றிருக்கிறேன். 2 முறை பேரவை உறுப்பினராக வெற்றி பெற்று, தற்போது 3-ஆவது முறையாக போட்டியிடுகிறேன். கடந்த தோ்தலை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

திமுக எப்போதுமே எங்களுக்கு எதிரிதான். நேராக வந்தாலும், வளைந்து வந்தாலும், அவா்களது கூட்டணி சாா்பில் எந்தக் கட்சி வந்தாலும் எங்களுக்கு எதிரிதான். முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். திமுக அளிக்கும் வாக்குறுதியை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. திமுக தோ்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்கிறாா் முக.ஸ்டாலின்.

நிஜமான கதாநாயகன் அதிமுக பொதுச் செயலா் பழனிச்சாமி தான். நான் ஊருக்குப் புதியவன் அல்ல. என்றைக்கும் மக்களுடன் நேரில் தொடா்பில் இருப்பவன் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.