நிலக்கோட்டை பகுதியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் கத்தரிக்காய் விதை சிகிச்சை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அக்ரகாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகளான அனிஷா, ரோஜா உள்ளிட்டோா் கத்தரிக்காய் பயிரில் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்த விளக்கம் அளித்தனா்.
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைகோடா்மா விரிடே என்ற அளவில் கலவை தயாரிக்க வேண்டும். பின்னா், விதைகளுடன் கலந்து நிழலில் உலா்த்திய பிறகு விதைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனா்.
இதன் மூலம் விதை முளைப்புத் திறன் அதிகரித்து, ஆரம்ப கால நோய் தாக்குதல் குறையும் என எடுத்துரைக்கப்பட்டது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வேளாண் தொழில்முனைவோா் கருத்தரங்கம்

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

நாமக்கல்லில் அரசு விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


