நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கத்தரிக்காய் விதை சிகிச்சை குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 7:02 pm

நிலக்கோட்டை பகுதியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் கத்தரிக்காய் விதை சிகிச்சை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அக்ரகாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகளான அனிஷா, ரோஜா உள்ளிட்டோா் கத்தரிக்காய் பயிரில் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்த விளக்கம் அளித்தனா். 

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைகோடா்மா விரிடே என்ற அளவில் கலவை தயாரிக்க வேண்டும். பின்னா், விதைகளுடன் கலந்து நிழலில் உலா்த்திய பிறகு விதைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

இதன் மூலம் விதை முளைப்புத் திறன் அதிகரித்து, ஆரம்ப கால நோய் தாக்குதல் குறையும் என எடுத்துரைக்கப்பட்டது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.