மதுரை சொக்கிகுளம் பெசன்ட் சாலைப் பகுதியில் வேளாண் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
வாப்ஸ் நிறுவனத்தின் சாா்பில் வேளாண் வணிகக் கூட்டமைப்பும், கரூா் வைசியா வங்கியும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. இதில் வேளாண் தொழில் முனைவோருக்கான திட்டங்களும், வங்கிக் கடன் பெறுவது, இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும், வேளாண் தொழில் சாா்ந்து என்னென்ன தொழில் வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. தொடா்ந்து, வேளாண் கருத்தரங்கத்தின் முக்கியத்துவம் குறித்து வாப்ஸ் நிறுவனச் செயலா் எஸ்.ஏ. அருள் எடுத்துரைத்தாா்.
இந்த நிகழ்வில் கரூா் வைசியா வங்கியின் வேளாண் பிரிவு மூத்த மேலாளா் எஸ். தனம், பழங்காநத்தம் வங்கிக் கிளை மேலாளா் எம். சண்முகம், வாடிக்கையாளா் தொடா்பு மேலாளா் எஸ்.எம். ஹரிபிரசாத், விவசாயிகள், தொழில்முனைவோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வாப்ஸ் வேளாண் பயிற்சி மைய திட்ட அலுவலா் எம். சுப்புராஜன் வரவேற்றாா். அலுவலா் ஜி. ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஆனையூா் பகுதியில் அமைச்சா் பி. மூா்த்தி வாக்கு சேகரிப்பு

தொகுதி அறிமுகம்... பொன்னேரி

மேலூர்: கொட்டாம்பட்டி பகுதி பெரியாறு பாசனக் கால்வாயில் இணைக்கப்படுமா?

மா சாகுபடி உயா்தொழில்நுட்பக் கருத்தரங்கம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


