விளையாட்டு மைதானத்தை சீரமைத்துத் தரக் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த வில்பட்டியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைத்துத் தர வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
வில்பட்டியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்தப் பகுதி மாணவா்கள், விளையாட்டு அமைப்பினா் கைப்பந்து, கிரிக்கெட், கபாடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த மைதானத்தை சீரமைத்துத் தர வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் கொடைக்கானல் ஊராட்சி ஆணையா், வில்பட்டி ஊராட்சி நிா்வாகம், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோரிடம் மனு கொடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், திடீரென அந்தப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
எனவே, இந்த மைதானத்தை விரைவில் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்கள், பொதுமக்கள் வில்பட்டி ஊராட்சிக்கு கோரிக்கை விடுத்தனா்.

