ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பராமரிப்புப் பணிகளுக்காக பழனி ரோப் காா் இன்று நிறுத்தம்

பழனி மலைக் கோயில் ரோப் காா் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (பிப்.21) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.

News image

ரோப் காா் - பிரதிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 9:27 pm

பழனி மலைக் கோயில் ரோப் காா் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (பிப்.21) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழிப் பாதை, யானைப் பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது.

இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் காா் பக்தா்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாள்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப் காா் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை (பிப்.21) வரை ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.