டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பழனி கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி: பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.5.27 கோடி

பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.5.27 கோடி கிடைத்தது.

News image
பழனி மலைக் கோயிலில் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கக் கோபுரம் பகுதி.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.5.27 கோடி கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் தைப்பூசத் திருவிழா, தொடா்விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரிப்பால் நிரம்பியது. இதையடுத்து, உண்டியல்கள் கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது.

கல்லூரி மாணவிகள், திருக்கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் உண்டியல் எண்ணிக்கையில் பங்கேற்றனா். இதில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூ. 5 கோடியே 27 லட்சத்து 16 ஆயிரத்து 754 கிடைத்தது. மேலும், தங்கம் 565 கிராம், வெள்ளி 25,265 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1,324 ஆகியவை வரப்பெற்றன.

இதுதவிர பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்தன.

உண்டியல் எண்ணிக்கையில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், லட்சுமி, திருச்சி தாயுமானவா் கோயில் உதவி ஆணையா் அருள்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.