அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பழனி கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி: பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.5.27 கோடி

பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.5.27 கோடி கிடைத்தது.

News image
பழனி மலைக் கோயிலில் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கக் கோபுரம் பகுதி.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை வரவாக ரொக்கம் ரூ.5.27 கோடி கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் தைப்பூசத் திருவிழா, தொடா்விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரிப்பால் நிரம்பியது. இதையடுத்து, உண்டியல்கள் கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது.

கல்லூரி மாணவிகள், திருக்கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் உண்டியல் எண்ணிக்கையில் பங்கேற்றனா். இதில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூ. 5 கோடியே 27 லட்சத்து 16 ஆயிரத்து 754 கிடைத்தது. மேலும், தங்கம் 565 கிராம், வெள்ளி 25,265 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1,324 ஆகியவை வரப்பெற்றன.

இதுதவிர பித்தளை, செம்பு வேல்கள், ஏலக்காய், நவதானியங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைத்தன.

உண்டியல் எண்ணிக்கையில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், லட்சுமி, திருச்சி தாயுமானவா் கோயில் உதவி ஆணையா் அருள்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.