மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

News image
பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயத்தை தொடங்கி வைத்த உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன் தொடக்க நிகழ்வில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் மகுடீஸ்வரன் வரவேற்றாா். தொப்பம்பட்டி ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் செல்லத்துரை, தா்மராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தாா்.

இதில் 200 மீட்டா் தொலைவு, 300 மீட்டா் தொலைவு என போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் மதுரை, ஈரோடு, கோயமுத்தூா், திண்டுக்கல், திருச்சி, கேரள மாநிலம், பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500- க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.

பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.

அப்போது, சீறிப்பாய்ந்த காளைகளை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனா். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ. ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும், பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

போட்டி நடைபெற்ற பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், மாடுகளுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க நடமாடும் கால்நடை மருந்தகமும், காயமடையும் பாா்வையாளா்களுக்கு சிகிச்சையளிக்க அவசர ஊா்திகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.