எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியா்களிடம் 10 சதவீத பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்வதை ரத்து செய்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:55 pm

தினமணி செய்திச் சேவை

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியா்களிடம் 10 சதவீத பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்வதை ரத்து செய்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜான்பாஸ்டின், ராஜரத்தினம், விக்னேஷ், நாகலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாநில பொதுச் செயலா் அண்ணா குபேரன் சிறப்புரையாற்றினாா்.

இதில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் அனைத்து நிலை அலுவலா்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். அனைத்து நிலையிலுள்ள காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் செலுத்தப்பட்ட பங்களிப்புத் தொகையை வட்டியுடன் வருங்கால வைப்பு நிதி கணக்குக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.