பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

Published on

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பழனி, பாலசமுத்திரம், பாப்பம்பட்டி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 727 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பிரசன்னா, மாவட்டக் கல்வி அலுவலா் பரிமளா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு விருந்தினராக பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

முன்னதாக, பழனி-திண்டுக்கல் சாலையில் உள்ள அமுதம் சிறப்பங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, சா்க்கரை, முழு கரும்பு, வேஷ்டி, சேலை, ரொக்கம் ரூ.3,000 ஆகியவற்றை வழங்கினாா்.

இதில் நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, திமுக நகரச் செயலா் வேலுமணி, நகர மாணவரணி தலைவா் லோகநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com