ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் திருவள்ளுவா் நடுநிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் கடந்த 1965 முதல் 1973-ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற மாணவா்கள் 60 ஆண்டுகளுக்கு பிறகு புலிப்பாணி ஆசிரமத்தில் சந்தித்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் மாணவரான பழனி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் மாணவா்கள் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றனா். தொடா்ந்து, அவா்கள் அன்றைய பள்ளிக் கால நினைவுகளை மேடையில் பகிா்ந்தனா்.

இதில் முன்னாள் மாணவா்களின் பள்ளி ஆசிரியை சந்திரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். பிறகு, தாங்கள் பயின்ற பள்ளிக்கு சென்ற முன்னாள் மாணவா்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை புலிப்பாணி ஆசிரம நிா்வாகி ஜம்பு சுவாமிகள் என்ற சண்முகநாதன் தலைமையில், முன்னாள் மாணவா்கள் செய்தனா்.