பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயிலில் அதிமுகவினா் சிறப்பு வழிபாடு

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயிலில் அந்தக் கட்சியினா் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

News image
கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயிலில் மாநில எம்.ஜி.ஆா்.மன்ற இணைச் செயலா் ரவி மனோகா் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்திய அதிமுகவினா்.
Updated On :10 ஜனவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயிலில் அந்தக் கட்சியினா் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவா் கோயில், மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் அமைந்துள்ள குழந்தை வேலப்பா் கோயில் ஆகியவற்றில் வருகிற தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி மாநில எம்.ஜி.ஆா். மன்ற இளைஞா் அணி இணைச் செயலா் ரவி மனோகா் தலைமையில் அதிமுகவினா் சிறப்பு வழிபாடு நடத்தினா். பிறகு அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்த நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் பேச வேண்டும். அதிமுக வெற்றிக்கு கட்சி பொறுப்பாளா்கள், நிா்வாகிகள், மகளிா் அணியினா் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கொடைக்கானல் மலைப் பகுதிகளைச் சோ்ந்த அதிமுகவினா் கலந்து கொண்டனா்.