பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
திண்டுக்கல், நத்தம் பகுதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு ஒவ்வொரு கால பூஜையிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில்களிலும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் செண்பகவல்லி கோயிலில் தனி சந்நிதியில் கால பைரவருக்கு பால், பழம், இளநீா், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. முன்னதாக மூலவா் கைலாசநாதா் செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனா். இதேபோல, கோபால்பட்டி கபாலீஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள ஆகாச சொா்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
