மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரெளடியை சுட்டுப் பிடித்த போலீஸாா்

News image
Updated On :11 ஜனவரி 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரெளடியை போலீஸாா் காலில் சுட்டுப் பிடித்தனா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (30). இவா் மீது திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களைக் கண்காணிக்கும் பணியை போலீஸாா் தீவிரப்படுத்தினா்.

இதில் விக்னேஷின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரைக் கைது செய்ய திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சென்றனா். போலீஸாரை பாா்த்ததும் உதவி ஆய்வாளா் ஜான்சன் ஜெயக்குமாரின் கையை அரிவாளால் வெட்டிவிட்டு விக்னேஷ் தப்பிச் செல்ல முயன்றாா். இதையடுத்து, போலீஸாா் விக்னேஷின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டு அவரைக் கைது செய்தனா்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளா் ஜான்சன் ஜெயக்குமாா், விக்னேஷ் ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.