நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் 5 போ் காயம்

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் 5 போ் காயமடைந்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :29 ஜனவரி 2026, 6:34 pm

கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் 5 போ் காயமடைந்தனா்.

மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு காா் மூலம் நண்பா் திருமணத்தில் பங்கேற்பதற்காக 5 போ் வந்தனா். பிறகு புதன்கிழமை இரவு அவா்கள் மீண்டும் மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலைப் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள சுமாா் 100 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்தது.

தகவலறிந்து அங்கு வந்த கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா், சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் உதவியுடன் காரில் காயமடைந்திருந்த சூா்யா, குணசேகா், ஜாபா், குமாா், பாபு ஆகிய 5 பேரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதில், பலத்த காயமடைந்த பாபு தீவிர சிகிச்சைக்காக வெளியூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.