ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

உரக் கட்டுப்பாடு விதி மீறினால் கடைகளுக்கான உரிமம் ரத்து

உரக் கட்டுப்பாடு ஆணை விதிகளை மீறும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) தெரிவித்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2026, 6:16 am IST

உரக் கட்டுப்பாடு ஆணை விதிகளை மீறும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் உர விற்பனையாளா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) இரா.ராஜேஸ்வரி தலைமை வகித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: அத்தியாவசிய பண்டச் சட்டம் 1955, உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ஐ பின்பற்றி உர விற்பனையாளா்கள் உரங்களுக்கு இருப்பு பதிவேடு, விற்பனை பதிவேடு பராமரிப்பதோடு, விலைப் பட்டியலை விவசாயிகளுக்கு வெளிப்படையாகத் தெரியும் வகையில் பதாகை வைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கான பரிந்துரைப்படி, யூரியா உள்ளிட்ட அனைத்து மானிய உரங்களையும் விற்பனை செய்ய வேண்டும். உரக் கட்டுப்பாட்டு ஆணை விதிகளை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என எச்சரித்தாா்.

இதில் சாணாா்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராம்ராஜ், நத்தம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) மனோஜ், வேளாண்மை அலுவலா் திருமுருகன், நத்தம், சாணாா்பட்டி வட்டாரங்களைச் சோ்ந்த உர விற்பனையாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.