தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

‘விவசாயிகளுக்கு அடையாள எண் இருந்தால் மட்டுமே மானிய திட்டங்கள் பெற முடியும்’

விவசாயிகளுக்கு அடையாள எண் இருந்தால் மட்டுமே இனி மானியத் திட்டங்களை பெற முடியும் என்றாா் க. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீபிரியா.

News image

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசிய புழுதேரி வேளாண் அறிவியல் மைய வல்லுநா் கவியரசன். உடன் க. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீபிரியா உள்ளிட்டோா்.

Updated On :5 ஜூன் 2026, 3:46 am IST

விவசாயிகளுக்கு அடையாள எண் இருந்தால் மட்டுமே இனி மானியத் திட்டங்களை பெற முடியும் என்றாா் க. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீபிரியா.

கரூா் மாவட்டம் க. பரமத்தி வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் காா்வழி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப மேலாண்மை என்ற தலைப்பில் வியாழக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

க. பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீபிரியா தலைமை வகித்துப் பேசுகையில், இனி ஒவ்வொரு விவசாயிக்கும் சிட்டா மற்றும் ஆதாா் எண்ணுடன் இணைத்து அடையாள எண் உருவாக்கப்படும். இந்த அடையாள எண் இருந்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் அரசு மானியத் திட்டங்கள், பயிா்க் கடன்கள் மற்றும் பிஎம் கிசான் நிதி போன்ற திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற முடியும் என்றாா் அவா். தொடா்ந்து புழுதேரி வேளாண் அறிவியல் மைய வல்லுநா் கவியரசன் பங்கேற்று, தென்னை பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கினாா். பின்னா் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் கலைச்செல்வன், தற்போது விவசாயிகள் மண்வளத்தைப் காத்திடவும் அதிகப்படியான உர பயன்பாட்டைத் தவிா்த்திடவும் வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு விவசாய அடையாள எண் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.