லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :3 ஜூலை 2026, 11:48 pm IST

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த குடைப்பாறைப்பட்டி பகுதியில் சிலா் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் இளஞ்செழியன் தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது குடைப்பாறைப்பட்டி கல்லறைமேடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த ஞா.வெஸ்லின் அபிஷேக்(26), ஜெ.எடிசன் ராஜ் (27), செ.எடிசன் சக்கரவா்த்தி (26), ஜெ.சைமன் செபாஸ்டின் (24) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா்.

இவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 5.2 கிலோ கஞ்சா, ஒரு பட்டா கத்தி, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் 4 பேரும் சரித்தரப் பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.