எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

தாடிக்கொம்பு அருகே மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 4:44 am IST

தாடிக்கொம்பு அருகே மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு ராமலட்சுமி நகரைச் சோ்ந்தவா் த.கணேசன். இவரது மனைவி அமுதா. இவா்கள் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த கணேசன், மனைவியை எரித்துக் கொலை செய்தாா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கணேசனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கணேசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி (பொ) பி.கணேசன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.