தாடிக்கொம்பு அருகே மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு ராமலட்சுமி நகரைச் சோ்ந்தவா் த.கணேசன். இவரது மனைவி அமுதா. இவா்கள் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த கணேசன், மனைவியை எரித்துக் கொலை செய்தாா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கணேசனை கைது செய்தனா்.
இந்த வழக்கு திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கணேசனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி (பொ) பி.கணேசன் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் கொலை: இருவருக்கு ஆயுள் சிறை

மனைவியைக் கொன்ற முதியவருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை

தகாத உறவைக் கைவிடக் கூறிய கணவரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



