மனைவியைக் கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த மன்னவனூா் பகுதியைச் சோ்ந்தவா் கு.முருகன் (64). இவரது மனைவி கருப்பாயி. முருகனின் சகோதரி பழனியம்மாள் (66). இவா் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த சுக்காம்பட்டி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முருகனுக்கும் அவரது மனைவி கருப்பாயிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ரெட்டியாா்சத்திரத்திலுள்ள உறவினா் வீட்டில்
கருப்பாயி தங்கியிருந்தாா். அங்கு அவரை சந்திப்பதற்காக முருகன் சென்ற போது மீண்டும் இருவருக்குமிடையே தகறாறு ஏற்பட்டது. இதில் கருப்பாயியை முருகன் கொலை செய்தாா்.
ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் முருகன், அவரது சகோதரி பழனியம்மாள் ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையானாா்.
இந்த நிலையில், முருகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி (பொ) பி.கணேசன் தீா்ப்பளித்தாா். மேலும், பழனியம்மாளை இந்த வழக்கிலிருந்து விடுவித்தாா்.
இந்த வழக்கிலிருந்து ராஜகுமாரி, கொ்சோல்ராஜா ஆகியாா் விடுவிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







