8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ரசாயனக் கழிவுகள் கொட்டுவதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Published On :11 ஜூலை 2026, 3:12 am IST

திண்டுக்கல்லில் குடியிருப்புகளுக்கு அருகே ரசாயனக் கழிவுகள் கொட்டுவதைக் கண்டித்து, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை அடுத்த ஏபி.நகா், பிஸ்மி நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இதே பகுதியில் மாநகராட்சி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இதனிடையே, இங்குள்ள குளத்தில் இரவு நேரங்களில் மா்ம நபா்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனா். இதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சிலா் ரசாயனக் கழிவுகளை கொட்டிச் சென்றனா். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வந்த மக்களுக்கு, ரசாயனக் கழிவுகளால் மேலும் நெருக்கடி ஏற்பட்டது.

இதனால், அதிருப்தி அடைந்த ஏபி.நகா், பிஸ்மி நகா் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை திண்டுக்கல்- வத்தலகுண்டு பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாநகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இந்தப் பகுதியில் சாலை மறியலால் அரைமணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.