திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது. இதையொட்டி, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன் பொதுமக்களுக்கு கைப்பேசி மூலம் மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு பதிவு செய்வது குறித்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வில் வட்டாட்சியா் மங்களபாண்டியன், வருவாய்த் துறை அலுவலா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பாலசமுத்திரம் பேரூராட்சி சாா்பில், பழனி- கொடைக்கானல் சாலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் இல்லத்தில் அவரது கைப்பேசியில் மக்கள்தொகை சுயகணக்கெடுப்பு பதிவு செய்யப்பட்டது.
இதில் பாலசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலா் சித்திரைக்கனி, மன்ற உறுப்பினா் வாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு சாதகமாக இருக்காது! காா்த்தி சிதம்பரம் எம்.பி.

புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

மக்கள்தொகை சுயகணக்கெடுப்பு: விரைந்து பதிவு செய்ய அறிவுறுத்தல்

நவீன தொழில்நுட்பத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: இயக்குநா் தகவல்
விடியோக்கள்

சுதந்திர நாள் விழா! முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்! | CM Vijay | TVK



