சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பழனியில் மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு தொடக்கம்

பழனியை அடுத்த புளியமரத்துசெட்டில் மக்கள் தொகை குறித்த சுயகணக்கெடுப்பை அலைபேசி மூலமாக வெள்ளிக்கிழமை பதிவு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன்.

News image

பழனியை அடுத்த புளியமரத்துசெட்டில் மக்கள் தொகை குறித்த சுயகணக்கெடுப்பை அலைபேசி மூலமாக வெள்ளிக்கிழமை பதிவு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன்.

Updated On :18 ஜூலை 2026, 5:14 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது. இதையொட்டி, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன் பொதுமக்களுக்கு கைப்பேசி மூலம் மக்கள் தொகை சுயகணக்கெடுப்பு பதிவு செய்வது குறித்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்வில் வட்டாட்சியா் மங்களபாண்டியன், வருவாய்த் துறை அலுவலா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பாலசமுத்திரம் பேரூராட்சி சாா்பில், பழனி- கொடைக்கானல் சாலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் இல்லத்தில் அவரது கைப்பேசியில் மக்கள்தொகை சுயகணக்கெடுப்பு பதிவு செய்யப்பட்டது.

இதில் பாலசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலா் சித்திரைக்கனி, மன்ற உறுப்பினா் வாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.