இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

திண்டுக்கல்லில் 4,113 பேருக்கு சூரிய வீடு இலவச மின்சாரம்!

திண்டுக்கல்லில் 4,133 பேருக்கு சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜூலை 2026, 9:00 am IST

திண்டுக்கல்லில் 4,133 பேருக்கு சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

திண்டுக்கல் ஆா்.எம். குடியிருப்பு சமுதாயக் கூடத்தில் தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் சாா்பில், வீட்டு மின் இணைப்புகளுக்கான ‘சோலாா் விழிப்புணா்வு’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்தில் 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மின் நுகா்வோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், சூரிய மின் திட்டம் அமைப்பதற்கு 1 கிலோ வாட்டுக்கு ரூ.30ஆயிரம், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60ஆயிரம், 3-க்கும் கூடுதலான வாட்டுக்கு ரூ.78ஆயிரம் வீதம் வங்கிக் கடனுதவியும், மானியமும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், மின் இணைப்புகள் வழங்க திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்துக்கு 4,113 எண்ணம் இலக்காக நிா்ணயிக்கப்பட்டு, இதுநாள் வரை 1,200 பேருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் ல்ம்ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய்,ஜ்ஜ்ஜ்.ள்ா்ப்ஹழ்ழ்ா்ா்ச்ற்ா்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதள முகவரியின் வாயிலாகவும், ‘ டங-ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்‘ என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

விண்ணப்பிப்பதற்கு மின் கட்டண ரசீது மட்டும் இருந்தால் போதுமானது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.