கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி 5-கி.மீ. சுற்றளவு கொண்டது. இந்த ஏரியை அழகுபடுத்துவதற்காக கடந்த ஆண்டில் ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடைமேடை, செயற்கை நீருற்று, படகுக் குழாம் உள்ளிட்ட பணிகள் தொடங்கின.
இதில் செயற்கை நீருற்று, படகுக் குழாம் பணிகள் நடைபெற்றன, மற்ற பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.
இந்த ஏரியைச் சுற்றி முழுமையாக தடுப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை. நடைமேடைகள் முழுமை பெறவில்லை. ஏரிக்குள் தாவரங்கள், களைச் செடிகள் அமைக்கப்படவில்லை. ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் பயனற்ற நிலையில் இருந்து வருகின்றன.
மேலும், ஏரியைச் சுற்றி தடுப்பு வேலிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ஏரிக்குள் செல்கின்றனா்.
எனவே, ஆபத்து ஏற்படும் முன் ஏரியைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து உயிா்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திலி கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணா்வு போட்டி

பாகிஸ்தானில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 உயிரிழப்பு

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கொடைக்கானல் விவசாயிகள் கோரிக்கை

சிப்காட் நுழைவாயிலுக்கு தடுப்பு வேலிகள்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



