பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த சாா் பதிவாளா், அதே நாளில் மேலும் ஓா் அரசு நிலத்தையும் தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
பழனி கவுண்டா் இட்டேரி சாலையும், பழைய தாராபுரம் சாலையும் இணையும் இடத்தில் சுமாா் ரூ. 60 கோடி மதிப்பிலான ஓா் ஏக்கா் 66 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னா் அப்போதைய பழனி நகா்மன்றத் தலைவரும், பழனி காணியாளருமான மங்கள கவுண்டா் நகராட்சிக்கு குப்பைகள் கொட்டுவதற்காக தானமாக வழங்கினாா்.
இந்த இடமானது பற்றாக்குறையாக இருந்த நிலையில், மங்கள கவுண்டா் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவிலான மற்றொரு நிலத்தையும் குப்பைகள் கொட்டுவதற்காக நகராட்சிக்கு தானமாக வழங்கினாா். அப்போது, முன்னா் வழங்கிய நிலத்தை மீண்டும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என நகராட்சியுடன் அவா் ஒப்பந்தம் செய்தாா்.
ஆனால், குப்பைகள் கொட்டும் பழைய இடம் அரசு நிலமாகவும், தற்போதுள்ள குப்பைகள் கொட்டும் புதிய இடம் காணியாளா் மங்கள கவுண்டா் குடும்ப வகையறாக்கள் பெயரிலுமே இன்னமும் உள்ளன.
இந்த நிலையில், அரசு பெயரில் உள்ள நிலத்தை நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த ஒருவா் ரூ. 2 கோடி என மதிப்பிட்டு தனது மகனுக்கு உயில் சாசனம் மூலம் தானமாக எழுதிக் கொடுத்தாகவும், இந்த இடத்தை தானமாகப் பெற்றவா் அதே நாளில் பெரியம்மாபட்டியைச் சோ்ந்த ஒருவருக்கு ரூ. 20 லட்சத்துக்கு விற்பனை செய்ததாகவும் பழனி பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவாகியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அதே நாளில், அன்றைய தினம் பணியில் இருந்த சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டனே இந்தப் பத்திரப் பதிவையும் மேற்கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காணியாளா் பண்ணாடி கந்தசாமி கூறியதாவது:
மங்கள கவுண்டா் வகையறா சொத்துகள் இன்னமும் பிரிக்கப்படாமல் உள்ளன. யாா் தானமாகக் கொடுத்தாரோ அவரே உயில் வழங்கிய தேதிக்கு பின்னா் தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் எனத் தெரிவித்து வழக்கு தொடுத்துள்ளாா். இது ஒன்றே உயில் செல்லாது என்பதற்கு ஆதாரமாகும்.
கடந்த 6-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பழனி சாா் பதிவாளராக பொறுப்பு வகித்த ஜஸ்டின் மணிகண்டன் திட்டமிட்டு இதுபோன்ற பத்திரப்பதிவுகளை செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே, அவா் பழனியில் பணியாற்றிய நாள்களில் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை ஆய்வு செய்து அவற்றை ரத்து செய்வதுடன், அவா் மீதும், இதுபோன்ற பத்திரப் பதிவுகளை செய்யும் தரகா்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் நில முறைகேடு: உடனடி நடவடிக்கை தேவை! முன்னாள் அமைச்சா் பி. மூா்த்தி!

பழனி கோயில் நில மோசடி! பத்திரப் பதிவு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை! முன்னாள் அமைச்சர் சொல்கிறார்!

பழனி கோயில் நில முறைகேடுக்கு பின்னால் உள்ள அந்த அதிகார மையம் யார்? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி





