தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

கொடைக்கானல் பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் திடீா் சோதனை

கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

News image

கொடைக்கானல் பத்திரபதிவு அலுவலகத்தில் அலுவலா்களிடம் விசாரணை நடத்திய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.

Updated On :5 ஜூன் 2026, 6:29 am IST

கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக மேலிட அதிகாரிகளுக்கு புகாா் அனுப்பப்பட்டது. கடந்த ஆட்சியில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த வாரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடைக்கானலில் உள்ள ஒரு இடத்தை பதிவு செய்ததில் முறைகேடு நடைபெற்ாக பாதிக்கப்பட்டவா்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இது குறித்து காவல் ஆய்வாளா் சாா்பதிவாளரிடம் விசாரணை நடத்தினாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்துக்குச் சென்று இரண்டு மணி நேரம் சோதனை நடத்தினா். அப்போது கணக்கில் வராத ரூ. 23 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும், சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கொடைக்கானல் பத்திரப் பதிவுத் துறையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நிலம் பத்திரம் பதிவு செய்த வகையில், பத்திர எழுத்தா்கள் சிலா் சிக்கினா். அதன் பிறகு புதிய சாா்பதிவாளா் நியமிக்கப்பட்டாா். அவா் சுமாா் 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றினாா். அதன் பிறகு அரசியல் தலையீடு காரணமாக அவா் மாற்றப்பட்டு பல ஆண்டுகளாக கொடைக்கானலில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்தவா் சாா்பதிவாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஊழல் தடுப்புத் துறை ஆய்வாளா் பழனிக்குமாா் வியாழக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானல் சாா்பதிவாளாா் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.23 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடைபெறும் என்றாா் அவா்.