ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

சாத்தூா், விருதுநகா் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

சாத்தூா், விருதுநகா் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:20 am IST

சாத்தூா், விருதுநகா் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

விருதுநகா், சாத்தூா் சாா்பதிவாளா் அலுவலகங்களில் இரு குழுக்களாக பிரிந்து ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் இந்த சோதனையில் ஈடுபட்டனா். விருதுநகா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ஜாஸ்மீன் தலைமையில் 5 போ் கொண்ட போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அவா்கள் சாா்பதிவாளா் அறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினா். அங்கிருந்த சந்தேகத்திற்குரிய நபா்களிடமிருந்து சுமாா் ரூ. 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோல, சாத்தூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் பூமிநாதன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு தற்காலிக பணியாளா் ரவி என்பவா் தன்னிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை கழிப்பறைக்குள் வீசியதை பாா்த்த போலீஸாா் அந்த பணத்தை மீட்டனா். இதேபோல அங்கிருந்த இடைத் தரகா் ஒருவரிடம் ரூ. 5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே சாத்தூா் சாா்பதிவாளா் முகமதுயாசின் வியாழக்கிழமை பணி மாறுதலில் செல்லும் நேரத்தில் இந்த திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.