/
கள்ளிமந்தையம் அருகே சாலையோரம் இருந்த மைல் கல்லில் இரு சக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் வசந்த் பெரியசாமி (25), தாடிக்கொம்பு அருகேயுள்ள அகரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சின்னகாளை (24)
ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வாகரை நோக்கி வியாழக்கிழமை சென்றனா். வாகரை அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மைல் கல், மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
தொடர்புடையது

பைக் மீது மீது காா் மோதி விபத்து: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞர் பலி!

லாரி மோதி இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



