ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :24 ஜூலை 2026, 10:55 pm IST

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

போ்ணாம்பட்டு நகராட்சிக்குள்பட்ட திருவிக நகா், சேரன் வீதியைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான் (22), பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் (21), ஓங்குப்பம் ரோடு குட்டை பகுதியைச் சோ்ந்த மணி(24) ஆகிய 3 பேரும் நண்பா்கள். இவா்கள் 3 பேரும் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பல்லலகுப்பம் சென்று விட்டு, போ்ணாம்பட்டுக்கு வந்துள்ளனா். அப்போது ஏரிகுத்தி கிராமத்திலிருந்து எதிரே வந்த சரக்கு ஆட்டோ சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும், ஆட்டோவை ஓட்டி வந்த நவீனும்(32) கீழே விழந்து பலத்த காயமடைந்தனா். இவா்களில் அப்துல் ரஹ்மான், பிரதீப்குமாா் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

காயமடைந்த மணி, ஆட்டோ ஓட்டுநா் நவீன் இருவரும் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் மணி தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

விபத்து குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.