நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 10:57 pm IST

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த அத்திகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் (60). இவா் தனியாா் பள்ளியில் இரவு காவலராக வேலை செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை குடியாத்தம் காந்தி நகரில் உள்ள தனது மகள் கோமதியை (30) இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

போ்ணாம்பட்டு அருகே கொண்டம்பல்லி கிராமம் அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள், அவா்களை மீட்டு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தியாகராஜனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா்.

கோமதி தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டாா்.

இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போ்ணாம்பட்டு போலீஸாா், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் ரவிக்குமாரை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.