கள்ளிமந்தையம் அருகே சாலையோரம் இருந்த மைல் கல்லில் இரு சக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள பள்ளபட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் வசந்த் பெரியசாமி (25), தாடிக்கொம்பு அருகேயுள்ள அகரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சின்னகாளை (24)
ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வாகரை நோக்கி வியாழக்கிழமை சென்றனா். வாகரை அருகே சென்றபோது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மைல் கல், மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரு வேறு சாலை விபத்துகளில் 6 போ் உயிரிழப்பு

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
டாஸ்மாக் பணியாளா்களை தாக்கி ரூ.3 லட்சம் திருட்டு

சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



