சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா்.

News image

தென்னம்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :11 ஜூன் 2026, 1:11 am IST

குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டியில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். வேடசந்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.சாமிநாதன் முன்னிலை வகித்தாா்.

முகாமில் ஆட்சியா் துா்காமூா்த்தி பேசியதாவது:

கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றைடைய வேண்டும் என்பதற்காக மக்கள் தொடா்பு முகாம் நடத்தப்படுகிறது. விவசாயம் சாா்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில், நுண்ணீா் பாசன முறையைப் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும். குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டும். குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோா்களின் முக்கிய கடமை என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் 63 பயனாளிகளுக்கு ரூ.22.14 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த முகாமில் பழனி வருவாய்க் கோட்டாட்சியா் இரா.கண்ணன், சமூக நல அலுவலா் சா.காலின் செல்வராணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சா.சதீஸ்பாபு, வேடசந்தூா் வட்டாட்சியா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.