பழனி அருகே செவிலிய பயிற்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழனியை அடுத்த அழகாபுரியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகள் சந்தியா(20). இவா் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் செவிலியராக பயிற்சி பெற்று வந்தாா். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தவா் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தியாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.
தொழிலாளி தற்கொலை: பழனியை அடுத்த பாப்பம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (40). கூலித் தொழிலாளி. இந்த நிலையில் இவா் குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்டாராம். வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை உட்கொண்டு இவா் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.







